News May 14, 2024

பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை

image

சுண்டக்குடியை சேர்ந்த விக்னேஷ்குமார் கடந்த 2021 இல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

Similar News

News March 10, 2026

அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.

News March 10, 2026

அரியலூர் விவசாயிகளுக்காகக் குளிர்பதன கிடங்கு!

image

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை விளைப் பொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலம் அதிநவீன குளிர்பதன கிடங்கு அரியலூர், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள்,அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!