News May 14, 2024

திண்டுக்கல்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 25, 2025

திண்டுக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 25, 2025

பழனியில் 15 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்!

image

பழனி காவல் உதவிஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் சிவகிரிப்பட்டி பழனியாண்டவர் கல்லூரி அருகில் ரோந்து சென்றனர். அப்போது கல்லூரி பஸ்நிறுத்தம், தண்ணீர் தொட்டி அருகில் கஞ்சா விற்று கொண்டிருந்த மாரிமுத்து, பெரியசாமி, ராஜா, கார்த்திகேயன், பிரிஜித், அமுதநிலவன், ராமசந்திரன் என மொத்தம் 15 பேரை மடக்கி பிடித்து கைது செய்து, சிக்கியவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, 5 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

News November 25, 2025

திண்டுக்கல்: இந்த பகுதிகளில் மின்தடை!

image

திண்டுக்கல்: நாளை (நவ.26) வேடசந்துார் நகர், லகுவனம்பட்டி, தம்மனம்பட்டி, காளனம்பட்டி,ஸ்ரீ ராமபுரம், அரியபந்தம் பட்டி , அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூர், மல் வார்பட்டி, அசோனாப்புதுார், ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், நவாலுாத்து, சுள்ளெறும்பு, குருநாதநா யக்கனுார், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண் டன்பட்டி, திப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு. SHARE!

error: Content is protected !!