News March 13, 2026

ரத்த ஆறு ஓடும்: ஈரான் எச்சரிக்கை

image

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு சொந்தமான தீவுகள் மீது போர் தொடுத்தால் பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைக்கு போர் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்பதால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் என அச்சம் எழுந்துள்ளது.

Similar News

News April 4, 2026

அதிருப்தியில் அதிமுகவிற்கு தாவிய தவெக நிர்வாகி

image

கரூர் துயர வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி அதிமுகவில் இணைந்திருப்பது விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தவெகவின் கரூர் மாநகரச் செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் அமைச்சர் MR விஜயபாஸ்கர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் பவுன்ராஜ் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News April 4, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது. மாணவர்களே விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. SHARE IT

News April 4, 2026

மத்திய அரசு கொடுத்த நிதி எங்கே? பியூஷ் கோயல்

image

திமுக அரசின் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை சென்னையில் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் கடன் சுமையும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசமும் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் தமிழ்நாடு நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், மத்திய அரசு கொடுக்கும் GST நிதி எங்கு செல்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!