News March 13, 2026
கேஸ் தட்டுப்பாடு என திட்டமிட்டு பரப்பப்படுகிறது: மோடி

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு பரப்புவதாக PM மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தகவல்களை பரப்புபவர்களின் உண்மை முகம் மக்களின் முன் அம்பலப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார். போரின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்றும், இதை எதிர்த்துப் போராட இந்தியா கடுமையாக உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 7, 2026
பாகிஸ்தானில் லாக்டவுன்.. முதல் நாடாக அறிவித்தது

மேற்காசிய போர் பதற்றத்தால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், PM ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணியுடன் மூட வேண்டும். ஹோட்டல்கள், திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
BREAKING: கடைசி நேரத்தில் அதிமுகவுடன் இணைந்தார்..

மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மதிமுக மாநில நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவரும், வைகோவுக்கு வலதுகரமாக இயங்கி வந்தவருமான முருகனின் விலகல் அக்கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக ஆடுதுறை முருகன் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்ட நிலையில், வாய்ப்பு வழங்காததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 7, 2026
செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்தம்

கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனையை அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் மற்றும் வழக்கு விவரங்கள் புதிதாக கட்டப்படும் வீடு ரோட்டரி லைசன்ஸ் காலாவதியானது போன்ற காரணங்களால் 5 மணி வரை வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது.


