News March 12, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி

கேஸ் தட்டுப்பாட்டு காரணமாக பல இடங்களில் வீட்டு உபயோக சிலிண்டரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், வீட்டு சிலிண்டர்களை வணிக தேவைக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அவ்வாறு பயன்படுத்தினால் சிலிண்டர் பறிக்கப்படும் என்றும், இதுகுறித்து 044- 28592828 மற்றும் 1967 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. SHARE IT
Similar News
News April 13, 2026
விவசாயத்திற்கு துரோகம் இழைக்கும் ஸ்டாலின் அரசு: EPS

மேகதாது விவகாரத்தை கையிலெடுத்து நாகை, மயிலாடுதுறையில் EPS பரப்புரை மேற்கொண்டார். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின் அரசு, விவசாயத்திற்கு துரோகம் இழைப்பதாக குற்றம் சாட்டினார். அப்போது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறும் கர்நாடகா DCM டி.கே.சிவகுமார், ஸ்டாலின் நெருக்கமாக இருப்பதாக கூறி, மக்கள் மத்தியில் போட்டோவை காட்டி EPS விமர்சித்தார்.
News April 13, 2026
மகளிர் காங்., தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மோதல்

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால், மகளிர் காங்., தலைவர் பதவியிலிருந்து ஹெசீனா ராஜினாமா செய்தார். இதனையடுத்து, நேற்று நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில் மகளிர் காங்., பொறுப்பு தலைவராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாவட்ட தலைவர்கள், தங்களை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மாநிலத் தலைவரை அறிவித்ததை ஏற்கமுடியாது எனக்கூறி நாற்காலிகளை தூக்கிவீசி மோதலில் ஈடுபட்டனர்.
News April 13, 2026
மீன்கள் விலை தாறுமாறாக எகிறியது.. மக்கள் அதிர்ச்சி

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியாக சென்னை காசிமேட்டில் மீன்கள் விலை எகிறியது. 1 கிலோ வஞ்சிரம்: ₹1,300 – ₹1,600, பாறை: ₹600 – ₹700, சங்கரா: ₹600, கவளை: ₹200, இறால்: ₹500, கடம்பா: ₹200 – ₹400, கானாங்கத்த: ₹250 – ₹300 என விற்பனையாகிறது. வழக்கமான விலையை விட 3 மடங்கு விலை உயர்ந்து விற்பனையாகிறது. ஏப்.14 முதல் ஜூன் 14 வரை மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடல் மீன்பிடிக்க தடை என்பதால் மேலும் விலை உயருமாம்.


