News March 12, 2026
கடலூரில் அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வருகிற மார்ச் 26 நடைபெற உள்ளது. இதில், கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என, கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி தெரிவித்தார்.
Similar News
News March 12, 2026
கடலூர் மாவட்டத்தில் இன்று வரை 99 சதவீதம் மழை குறைவு

கடலூர் மாவட்டத்தில் (மார்ச் 1) ஆம் தேதி முதல் இன்று (மார்ச் 12) ஆம் தேதி வரை இயல்பாக 13.6 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 0 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 99 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
News March 12, 2026
பண்ருட்டி: மாணவி படுகொலை – MLA கண்டனம்

பண்ருட்டி MLA வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது மனதை உலுக்கும் துயரச சம்பவமாகும். இக்குற்ற செயலில் ஈடுபட்டவர்களுக்கு விரைவு நீதிமன்றம் மூலம் உச்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென’’ தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
கடலூர்: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <


