News May 14, 2024

லாரி மோதி பாய் வியாபாரி பலி

image

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்த்தவர் கோவிந்தராஜ்(பாய் வியாபாரி). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தேக்கல்நாயக்கன்பட்டி – கடத்தூர் சாலையில் நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Similar News

News August 16, 2025

தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது‌. தலைமை அதிகாரியாக P. ராமமூர்த்தி
நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி வேலுதேவன், அரூர் வான்மதி, பென்னாகரம் குமரவேல் மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்க

News August 15, 2025

தர்மபுரி ஹோட்டலில் சாப்பிடுவோர் கவனத்திற்கு

image

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரே நாளில் 100 இடங்களில் ஆய்வு செய்தனர். இதில் பழைய சிக்கன், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டிகள், பலமுறை பயன்படுத்திய எண்ணெய்யை உபயோக படுத்திய கடைகளுக்கு ரூ.17,000 அபராதம் விதித்தனர். மேலும், பொதுமக்கள் உணவு தொடர்பாக 9444042322 என்ற எண்ணிலோ அல்லது <>tnfoodsafety consumer app<<>>-ப்பிலோ புகாரளிக்கலாம் என தெரிவித்தனர். *ஹோட்டலில் சாப்பிடுவோருக்கு பகிரவும்*

News August 15, 2025

கிருஷ்ணகிரியில் தலைமை ஆசிரியருக்கு விருது

image

கிருஷ்ணகிரி சுதந்திர தின விழாவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வில் 100% தேர்ச்சி பெற்றுத்தந்த தலைமையாசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்படி பையர்நத்தத்தை சார்ந்த தலைமை ஆசிரியர் குபேந்திரனுக்கு சிறந்த ஆசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!