News March 10, 2026
கனரக லாரி மோதி தாயி, மகள் பலி

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. இவர் இன்று (மார்ச்.10) காலை தனது மகள் இனியாவை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த செங்கல் ஏற்றிய கனரக லாரி மோதி சம்பவ இடத்திலேயே தாயும், மகளும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 14, 2026
செங்கை: கதறிய மாணவி, கம்பி எண்ணும் காமுகன்!

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் வீட்டுக்குள் சென்று விசாரிப்பது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி அலறி அடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டுள்ளார். மேலும்போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 14, 2026
வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 14, 2026
வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


