News May 14, 2024
₹14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்?

தமிழகத்தில் கர்ப்பிணியருக்கு ₹14,000 ரொக்கம், ₹4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளாக இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி கிடைக்காமல் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மகப்பேறு நிதியுதவி விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் அதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினர்.
Similar News
News March 21, 2026
நடிகை கிரணை படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. கொடுமை

நண்பர்களே தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை கிரண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பண நெருக்கடி ஏற்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டதாகவும், அதற்கு அவர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தது மிகவும் வலியை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகே, பணம் சம்பாதிக்க கிளாமர் படங்களை அதிகளவில் SM-ல் பதிவிட ஆரம்பித்ததாகவும் கிரண் கூறியுள்ளார்.
News March 21, 2026
ஈரான் அதிபருடன் PM மோடி பேச்சுவார்த்தை

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை தொலைபேசியில் தொடர்புகொண்டு PM மோடி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, மேற்கு ஆசிய பிராந்தியங்களில் உள்ள கட்டமைப்புகள் மீதான தாக்குதலை கண்டித்ததாகவும் PM மோடி X-ல் பதிவிட்டுள்ளார். மேலும் மசூத் பெசெஷ்கியனிடம் கப்பல் வழித்தடங்கள் (Strait of Hormus) திறந்து இருப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
News March 21, 2026
அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு

தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது. விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி பொ.செ., பாபுஜி சவாமிகள் & அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து, அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவை தருவதாக தெரிவித்தனர். இலவச வீட்டு மனை, விஸ்வகர்மா சமூக நல வாரியம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக EPS உறுதியளித்திருப்பதாகவும் பாபுஜி சுவாமிகள் கூறியுள்ளார்.


