News March 10, 2026
தனிமையில் இருப்பதால் இத்தனை நோய்கள் வருமா?

சிலர் எப்போது பார்த்தாலும் தனிமையிலேயே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதாக கேம்பிரிட்ஜ் பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. நரம்பு அமைப்பு & ஹார்மோன் சமநிலையை பாதிப்பதால் இந்த பிரச்னைகள் ஏற்படுகிறதாம்.
Similar News
News April 4, 2026
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது ஏன்? TTV

தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாததற்கு எந்த அழுத்தமும் காரணமில்லை என TTV தினகரன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாள்களுக்கு முன்னரே தேர்தலில் போட்டியிட போவதில்லை, அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு செல்ல போகிறேன் என தன்னிடம் அண்ணாமலை கூறியதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்பது அவரது தனிப்பட்ட முடிவு எனவும் கூறியுள்ளார்.
News April 4, 2026
வெள்ளியை வைத்து கடன் பெறலாம்.. இதை கவனிங்க!

தங்கத்தை போன்று <<19547252>>வெள்ளியையும்<<>> அடமானம் வைத்து கடன் பெறும் திட்டம் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் சிறப்பம்சமாக, தொகையை பொறுத்து நகைக் கடன் மதிப்பு மாறும். ₹2.5 லட்சம் வரை கடன் பெற, வெள்ளியின் மதிப்பில் 85% வரை பணம் கிடைக்கும். ₹2.5 லட்சம் முதல் ₹5 லட்சம் வரை கடன் பெற, 80% வரையும், அதற்கு மேல் கடன் பெற விரும்பினால் 75% வரையும் என பணம் கிடைக்கும் என RBI புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.
News April 4, 2026
CBSE பாடத்திட்டத்தில் இந்தி திணிப்பா? தர்மேந்திர பிரதான்

CBSE பாடத்திட்டத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக<<19561968>> CM ஸ்டாலின் <<>>குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், திணிப்பு என்பது அவரது அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு முயற்சி என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்துள்ளார். புதிய கல்வி கொள்கை தாய்மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ஆனால் கட்டாய இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் தவறாக சித்தரிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.


