News May 14, 2024

நாளை மகளிர் உரிமைத் தொகை ₹1000

image

மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நாளை ₹1000 வராது. அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.

Similar News

News August 25, 2025

SKவுடன் என்றும் துணை நிற்பேன்: அனிருத் நெகிழ்ச்சி

image

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் வேறு ஒரு அவதாரத்தை பார்ப்பீர்கள் என அனிருத் தெரிவித்துள்ளார். மதராஸி இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர் SK இன்னைக்கு இந்த உயரத்துக்கு வளர்வதற்கு அவரின் தூய்மையான உள்ளமே காரணம் எனவும் அனிருத் நெகிழ்ந்துள்ளார். என்னைக்கோ ஒரு நாள் நான் field out ஆவேன் என கூறிய அவர் அன்னைக்கு எஸ்.கே-வோட வெற்றியை எண்ணி சந்தோஷப்படுவேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

News August 25, 2025

ADMK செய்தது மனிதநேயமற்ற செயல்: செல்வப்பெருந்தகை

image

திருச்சி <<17507617>>துறையூரில் அம்புலன்ஸை<<>> அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவம் மனிதநேயமற்ற செயல் என செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இந்த மிரட்டல் அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 25, 2025

விரைவில் இந்தியா வரும் உக்ரைன் அதிபர்

image

PM மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வர உள்ளார். இந்த தகவலை பகிர்ந்த அந்நாட்டு தூதர் அலெக்சாண்டர் போலிஷ்சுக், பயணத் தேசி விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில் ரஷ்யாவுடனான போர் மற்றும் இந்தியா – உக்ரைன் உறவு குறித்து, மோடியுடன் ஜெலன்ஸ்கி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. போரை நிறுத்த ஏற்கனவே புதினிடமும் மோடி ஆலோசித்துள்ளது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!