News March 8, 2026
அரசியலில் விசுவாசம் குறைந்துவிட்டது: நேரு

அரசியலில் இப்போது விசுவாசம் குறைந்துவிட்டதாக அமைச்சர் KN.நேரு கூறியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தஞ்சாவூரில், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு மண்டப திறப்பு விழாவில் பேசிய அவர், அந்த கால அரசியல்வாதிகள் முன்பு உள்ளதை நினைத்து பார்க்கக் கூடியவர்கள் என்றார். அண்மை காலமாக பலர் திமுகவில் இணைவதை விரும்பாத நேரு, விசுவாசம் குறித்து பேசினாரா? என SM-ல் விவாதம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 10, 2026
விஜய்க்கு அழைப்பு.. அதிரடியாக நீக்கிய நயினார்

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
News March 10, 2026
திமுக – காங்கிரஸ் கூட்டணி சாத்தியமானது எப்படி? ப.சி

நீண்ட இழுபறியுடன் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், அதுகுறித்து ப.சிதம்பரம் மனம் திறந்துள்ளார். பேச்சுவார்த்தை குழுவில் 2,3 பிற மாநிலத்தவர்கள் இருந்ததால் இடைவெளி இருந்தது; ஆனால் ஸ்டாலினுக்கு நெருங்கிய தான் பேசியதும் எல்லாம் சரியாகிவிட்டது என்றார். காங்கிரஸுக்கு திமுக துணையும், திமுகவுக்கு காங்கிரஸின் துணையும் வேண்டும். அதனால் கூட்டணி முறியாது என்பது தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.
News March 10, 2026
BREAKING: செந்தில் பாலாஜிக்கு இரவில் வந்த அதிர்ச்சி

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் விஜய்யை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கும் CBI சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், <<19340950>>சம்மனை செந்தில் பாலாஜி<<>> வாங்க மறுத்ததோடு, இரவோடு இரவாக வழக்கறிஞர் அணியுடன் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்க்கு, CBI மூலம் அழுத்தம் கொடுக்கப்படுவதாக பேசப்படும் நிலையில், செந்தில் பாலாஜிக்கான சம்மன் விவகாரம் திமுக தரப்பையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.


