News May 14, 2024

ராம்நாடு: தண்ணீரில் மிதந்த ஆண் சடலம்

image

திருவாடானை ஓரியூர் சாலையில் டாஸ்மாக்
உள்ளது. இதன் எதிரே உள்ள அத்தாணி வயல் கண்மாயில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இது குறித்து திருவாடானை கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் திருவாடானை போலீசார் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.

Similar News

News September 5, 2025

ராம்நாடு: ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் RAILWAY வேலை!

image

ராமநாதபுரம் இளைஞர்களே ரயில்வே வேலைக்கு செல்ல ரெடியா? ரயில்வே துறையில் மிக முக்கியமான பதவியான (RRB Section Controller) பதவிக்கு 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வந்துள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,400 முதல் ரூ.45,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் செப்டம்பர் 15-ம் தேதி முதல் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 5, 2025

ராம்நாடு: நம்ம ஊரில் அரசு வேலை.. நேரில் செல்லுங்கள்!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108, 102 ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர், ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான நேர்காணல் R.S.மங்களம் (சனி), பார்திபனூர் (ஞாயிறு) ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் சான்றிதழ்களுடன் நேரில் செல்லலாம். சம்பளம் ரூ.21,000. மேலும் தகவலுக்கு 8925941097 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

இராமநாதபுரம்: மாநில கொள்கை பரப்பு செயலாளராக நியமனம்

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஒன்றியம் ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்த அஜீஸ்பாய் தமிழர் அதிகாரம் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தமிழர் அதிகாரம் கட்சியின் தலைவர் அழகர் சாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாநில கொள்கை பரப்பு செயலாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!