News March 7, 2026
ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.
Similar News
News March 23, 2026
பொன்முடிக்கு Bye Bye சொன்னதா திமுக தலைமை?

சர்ச்சை கருத்துகள் பேசி சிக்கியதால் வரும் தேர்தலில் பொன்முடிக்கு சீட் கிடைப்பது கடினமே என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது நடக்கும் வேட்பாளர் நேர்காணலில் பொன்முடி பங்கேற்கவில்லை என ஒரு தகவல் கசிந்துள்ளது. இவருக்கு பதிலாக இவரது மகன் கௌதம சிகாமணிக்கு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது
News March 23, 2026
புதுச்சேரியில் தவெக – நேமக கூட்டணி.. கடைசி நேர திருப்பம்

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், திடீர் திருப்பமாக சுயேட்சை MLA நேருவின் நேயம் மக்கள் கட்சியுடன் (நே.ம.க) கூட்டணி அமைத்துள்ளது. அக்கட்சிக்கு உருளையன்பேட்டை, தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளையும் தவெக ஒதுக்கியுள்ளது. தவெக தனித்தே போட்டி என்ற முடிவை மாற்றிய விஜய், வேட்புமனு தாக்கலுக்கு 3 மணிநேரமே உள்ளபோது கூட்டணி அமைத்து, அக்கட்சிக்கு சீட்டும் வழங்கியுள்ளார்.
News March 23, 2026
மக்கள் பிரச்னைக்காக திமுகவிடம் பேசாத திருமா: EPS

பொம்மை CM ஸ்டாலின் நடத்திய திமுக காட்டாட்சி, சட்டம் ஒழுங்கை திருத்தியதாக தெரியவில்லை என EPS சாடியுள்ளார். நெல்லையில் பட்டியலின விவசாயி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா, இதை பற்றி ஏன் திமுகவிடம் பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சீட்டுகளுக்காக திமுகவிடம் பேசுபவர்கள், மக்கள் பிரச்னைகளையும் பேசலாமே எனவும் கேட்டுள்ளார்.


