News May 14, 2024

சிவகங்கை: பிரதானக் கால்வாய் தண்ணீர் திறப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் மதகு அணை இடது பிரதானக் கால்வாயில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு நேற்று தண்ணீா் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று (மே 14) வரை தண்ணீா் திறக்கப்படும். புதன்கிழமை முதல் விரகனூர் மதகு அணையிலிருந்து பார்த்திபனூர் மதகு அணைவரை பகுதி இரண்டில் உள்ள சிவகங்கை மாவட்ட பூர்வீக வைகைப் பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்

Similar News

News March 13, 2026

சிவகங்கை: அதிமுகவில் இணைந்த OPS அணியினர்

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓபிஎஸ் அணியினை சேர்ந்த உதயனூர் பொன்னுதுரை, கல்லனி மோகன் ஆகியோர் ஏற்பாட்டில் பலர் இன்று சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் PR.செந்தில்நாதன் தலைமையில் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் K.M.கோபி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 13, 2026

மானாமதுரையில் மீண்டும் அரங்கேறிய சம்பவம்.!

image

மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், நேற்று இரவு மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் ரோட்டில் நின்றதால் அவரை ஓரமாக நிற்க கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனி அரிவாளால் கார்த்திகேயன் முகத்தில் வெட்டினார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் பழனியை தேடி வருகின்றனர்.

News March 13, 2026

சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

image

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக இன்று (12..03.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு மேலே குறிப்பிட்டுள்ள நம்பருக்கு அதிகாரிகளை பொதுமக்கள் அழைக்கலாம் (அ) 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!