News March 6, 2026
வேலூர்: காதல் வலையில் சிக்கிய மாணவி; 7 மாதம் கர்ப்பம்!

அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவர் 18 வயது கல்லூரி மாணவி ஒருவரிடம் திருமணம் செய்வதாக கூறி தனிமையில் இருந்துள்ளார். இதன் காரணமாக மாணவி கர்ப்பம் ஆகினார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து சந்தோஷை தேடி வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
வேலூர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை eservices.tnpolice.<
News March 7, 2026
வேலூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

வேலூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க
News March 7, 2026
வேலூர்: 90 பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கு தலா 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் என மொத்தம் 45 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 45 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


