News May 13, 2024
திருச்சியில் ரவுடி மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!

திருச்சியில் கடந்த 2.5.2024ம் தேதி ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக திட்டி அவரின் வீடு மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் ரவுடி வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில்,
குற்றவாளி மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை இன்று குன்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.
Similar News
News March 11, 2026
திருச்சி: TNPSC குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 1 தேர்வு மையத்தில் முற்பகலில் 356 பேர், பிற்பகலில் 368 பேர் என மொத்தம் 724 எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வறைக்குள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வரக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
EPS வருகை; முன்னாள் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். இந்நிலையில் அவரை வரவேற்க முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்கூட்டியே அனுமதி கடிதம் வழங்காததால், அவர்களை விஐபி அறைக்குள் அனுமதிக்க முடியாது என விமான நிறைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
News March 11, 2026
திருச்சியில் பிரதமர் தொடங்கி வைக்கும் முக்கிய திட்டங்கள்!

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.


