News May 13, 2024
அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு தேதி வெளியானது

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியானது. அதில் நாட்டிலேயே அதிகபட்ச மதிப்பெண் (99.91) திருவனந்தபுரத்தில் பதிவாகியுள்ளது. விஜயவாடாவில் 99.0%, சென்னையில் 98.47% மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இந்நிலையில், 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்.15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

USA – ஈரான் போரின் எதிரொலியால், கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இந்நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502 புள்ளிகளிலும், நிப்டி 257 புள்ளிகள் உயர்ந்து 23,408 புள்ளிகளிலும் வர்த்தகமாயின. பெரும்பாலான வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
News March 16, 2026
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

லீவு என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். அந்த வகையில், இந்த வாரத்தில் 3 நாள்கள் விடுமுறையாகும். மார்ச் 19 (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி விடுமுறையாகும். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, ஞாயிற்றுக்கிழமை என அடுத்தடுத்து விடுமுறையாகும். 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு நெருங்கி வருவதால், விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் மாணவர்களே!
News March 16, 2026
தனித்து விடப்பட்ட ராமதாஸ்

தை பிறந்தால் வழி பிறக்கும், நமக்கான வாகனம் அருகே வந்துவிட்டது என கூறி வந்த ராமதாஸ், தற்போது வரை எந்தக் கூட்டணியிலும் இணையவில்லை. தைலாபுரத்தில் தன்னை சந்தித்த சசிகலாவிடம் கூட்டணியில் சேர விருப்பமில்லை என அவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என <<19396552>>CTR நிர்மல்குமார்<<>> கூறியுள்ளார். இதனால் ராமதாஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


