News March 5, 2026

புதுச்சேரி: இட ஒதுக்கீடு கோரி ஆளுநரிடம் மனு

image

புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ராம்குமார் தலைமையில், செயலாளர் புருஷோத்தமன் மற்றும் மத்திய அரசின் விருதாளர் ஆதவன் ஆகியோர் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்களை நேரில் சந்தித்தனர். பழங்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான இலவச மனைப்பட்டா மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கக் கோரி இந்த சந்திப்பின் போது அவர்கள் மனு அளித்தனர்.

Similar News

News March 6, 2026

புதுச்சேரி மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

image

புதுச்சேரி மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 6, 2026

புதுச்சேரி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் பண்ணுங்க!

News March 6, 2026

பான்கோஸ் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் விழா

image

புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பான்கோஸ் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் மற்றும் போனஸ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் மற்றும் பான்கோஸ் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 211 பயனாளிகளுக்கு ரூ.13.76 கோடி மதிப்பிலான காசோலைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பதிவாளர் முத்துமீனா கலந்து கொண்டனர்.

error: Content is protected !!