News March 5, 2026
நெல்லை: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த மாரியப்பன்(19) என்பவர் புகழேந்தி தெருவில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 220 கிராம் எடை உள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.
Similar News
News March 10, 2026
திருநெல்வேலி: மகனை குத்தி கொன்ற தாய்

சிவந்திப்பட்டி கலைக் கோவில் நகரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குடித்து விட்டு மதுபோதையில் வீட்டில் தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டியின் தாயார் மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவந்திபட்டி காவல்துறையினர் மகனை கொலை செய்த தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 10, 2026
நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 9, 2026
நெல்லை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!


