News March 5, 2026
மதுரை: இளைஞர் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

சக்கிமங்கலம் அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மன அழுத்தத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை கோடாங்கி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் விசாரணை.
Similar News
News March 13, 2026
மதுரை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

மதுரை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 13, 2026
மதுரை: 398 சிலிண்டர் பதுக்கல்; இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மதுரையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய 398 சமையல் எரிவாயு சிலிண்டர்களை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த பழனி, மதன்குமார் ஆகிய இருவரும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
News March 13, 2026
மதுரை: பப்ஜி விளையாட்டால் மேனேஜர் தற்கொலை.!

கேரளா கொல்லத்தை சேர்ந்த விஷ்ணுதாஸ் (27), வைரவ நத்தத்தில் உள்ள TVS வசூல் மையத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் எந்நேரமும் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். இதை உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றுவார்கள் கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் வைரவ நத்தத்தில் உள்ள எஸ்பிஎம் பங்களாவில் தங்கி இருந்தவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


