News March 5, 2026
எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை: எல்.முருகன்

தமிழ் மொழியை மட்டுமே TN-ல் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். <<19294297>>திருச்சி ரயில்வே அலுவலக சர்ச்சை<<>> குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எங்குமே ஹிந்தியை திணிப்பதில்லை எனக் கூறினார். தமிழ் தான் தொன்மையான மொழி என உலகம் முழுக்க PM மோடி பேசுவதாக குறிப்பிட்ட அவர், திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.
Similar News
News April 10, 2026
குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்திய ஆதவ்

தேர்தல் விதிகளை மீறி ஆதவ் அர்ஜுனா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் நடந்த ஆதவ் பிரசாரத்தில் தவெக சின்னம் இருக்கும் சட்டை, கையில் விசில், கட்சி துண்டுகளுடன் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரே விதிகளை மீறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 10, 2026
Sports 360: இன்று களம்காண்கிறது RR vs RCB

➤KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றிக்கு வித்திட்ட 21 வயது இளம் வீரர் முகுல் சவுத்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ➤IPL: RR மற்றும் RCB இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன ➤டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக GT கேப்டன் சுப்மன் கில்லுக்கு ₹12 லட்சம் அபராதம் ➤ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்
News April 10, 2026
58 தொகுதிகளையும் டார்கெட் செய்த EPS

ஆட்சியை தக்கவைக்க ஸ்டாலினும், ஆட்சியை கைப்பற்ற இபிஎஸ்ஸும் தீவிரமாக பரப்புரை செய்கின்றனர். இந்நிலையில், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் தனிச் சின்னங்களில் போட்டியிடும் 58 தொகுதிகளை EPS டார்கெட் செய்துள்ளாராம். திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் (காங்., விசிக) இணக்கம் இல்லாத நிலை, அதிருப்தி கூட்டணியில் கெமிஸ்ட்ரில் இல்லாதது ஆகிய சூழல்களை பயன்படுத்தி அத்தொகுதிகளை கைப்பற்ற நினைக்கிறாராம்.


