News March 5, 2026
புதுகை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வண்டி எண்.16128 குருவாயூர் – தாம்பரம் விரைவு ரயில் இந்த மாதம் முழுவதும், மதுரை, புதுக்கோட்டை வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில், இந்த ரயிலானது அருப்புக்கோட்டை, புதுக்கோட்டையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
புதுக்கோட்டை: மதுபோதையில் ரகளை – ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அடுத்த செட்டியாபட்டி கிளை சாலையில் நேற்று கணேஷ்குமார் (35) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
News March 8, 2026
புதுக்கோட்டை: கண்மாயில் விழுந்த வாகனம் – ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கரூர் – ஆவுடையார் கோவில் சாலை வரிக்குடி எல்லை கிராமம் அருகில் சென்ற இருசக்கர வாகனம், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த இளம்பாவயல் கண்மாயில் விழுந்து. இந்த விபத்தில், வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த கோனரிஏந்தல் கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி நா.ரெத்தினம் (52) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். SHARE பண்ணுங்க!
News March 8, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.7) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


