News May 13, 2024

விருதுநகரில் பெண் சடலமாக மீட்பு

image

தென்காசியை சேர்ந்தவர் ராஜம்மாள்(56). கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் குழந்தை இல்லாததால் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 8, 2026

விருதுநகர் மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு…!

image

விருதுநகர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 8, 2026

கூமாப்பட்டியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி

image

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூமாப்பட்டி கிளை சார்பில் நாளை இப்திகார் நோன்பு நிகழ்ச்சியை நடைபெற உள்ளது. இதில், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி மற்றும் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

News March 8, 2026

விருதுநகர்: 6ம் வகுப்பு சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை

image

ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கரிக்கோல் ராஜ்(68). இவர் 6-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுவர்களை அறைக்கு அழைத்து சென்று அவர்கள் முன்பு நிர்வாணமாக நின்றதோடு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுவர்கள் அவர்களின் தந்தையிடம் கூறினர். இதனை தொடர்ந்து ஏழாயிரம்பண்ணை போலீசார் முதியவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!