News May 13, 2024
நடப்பு ஐபிஎல்லில் இருந்து விலகினார் பட்லர்

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் அதிரடியாக ஆடி எதிரணிக்கு பெரும் சவாலாக திகழ்கிறார். இந்நிலையில், சொந்த நாட்டுக்காக விளையாட உள்ளதால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். RR அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ஒரு வெற்றிபெற்றால் ப்ளே ஆஃப்க்கு முன்னேறிவிடும். இருப்பினும் பட்லர் தற்போது விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Similar News
News August 7, 2025
திருடியதாக ஒப்புக் கொள் என அஜித் மீது கொடூர தாக்குதல்

அஜித் வழக்கில் திருத்தப்பட்ட FIR-ல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகை திருடியதாக அவர் ஒத்துக்கொள்வாரென போலீஸ் எண்ணினர். ஆனால், அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. அதனால், உயிர் போகும் அளவிற்கு அடித்து கொடுமை செய்துள்ளனர். தற்போது, வழக்கில் புகார்தாரராக அஜித்தின் தம்பி நவீன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தனிப்படை டிரைவர் ராமச்சந்திரனின் பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
என்னை விடுங்கள், போகிறேன் RR-யிடம் சஞ்சு பேச்சு?

வரும் IPL-ல் சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு விலகி CSK-ல் இணையவுள்ளார் என தகவல்கள் அண்மையில் பரவின. பயிற்சியாளர் டிராவிட்டுடன் ஏற்பட்ட மனக்கசப்பே சஞ்சுவின் வெளியேற்றத்துக்கு காரணமென கூறப்பட்டது. இந்நிலையில் வரும் IPL மினி ஏலத்துக்கு முன்பு தன்னை RR அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் அல்லது Trade செய்ய அனுமதிக்க வேண்டும் என RR நிர்வாகத்திடம் சாம்சன் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
News August 7, 2025
அதிமுக தலைமை மீது ராஜேந்திர பாலாஜி வருத்தம்?

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வராததால் ராஜேந்திர பாலாஜி வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த லோக் சபா தேர்தலில் விருதுநகரில் தேமுதிக தோற்றாலும், சுமார் 3.80 லட்சம் வாக்குகள் பெற்றது. தமிழகத்திலேயே தேமுதிகவுக்கு அதிக வாக்குகள் இங்கு தான் கிடைத்தது. கூட்டணியில் தேமுதிக இருந்தால் சிவகாசியில் போட்டியிட தனக்கு உதவியாகயிருக்கும், அதுவே திமுகவுக்கு சென்றால் பாதகமாகவும் என வருந்துகிறாராம்.