News March 4, 2026

நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnmkdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க

Similar News

News March 6, 2026

நாமக்கல்லில் இளைஞர்களை இழுக்கும் திமுக!

image

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூரை சேர்ந்த மைலேஷ் தலைமையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி முன்னிலையில், 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, பேரூர் செயலாளர்கள் முருகன், ரமேஷ்பாபு, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 6, 2026

ராசிபுரம் அருகே விபத்து: பெண் பலி

image

ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னபொண்ணு (75) என்ற மூதாட்டி, சாலையைக் கடக்க முயன்றபோது வேகமாக வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய நபர் குறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!