News March 4, 2026
தஞ்சாவூர்: முதல்வருக்கு நன்றி தெரிவித்த விஜய்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டினார். அப்போது தனக்கு ஆதரவாக பேசிய பலருக்கும், குறிப்பாக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் அப்போது பூசி மொழுகுவது போல் பேசியதாகக் குறிப்பிட்ட விஜய், அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
Similar News
News March 12, 2026
தஞ்சை: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<
News March 12, 2026
தஞ்சை: அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்பிடி, அதிமுக சார்பில் சோழபுரம் கடைவீதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் தலைமை பேச்சாளர் துகிலி நல்லிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளுக்கு சேலை வழங்கினர்.
News March 12, 2026
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுகோட்டை, ஒரத்தநாடு பேராவூரணி, பாபநாசம் வருவாய் அலுவலகத்திலும் இன்று (மார்ச் 12) நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களில், பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


