News March 4, 2026
புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பே. சிபின் இன்று (மார்ச் -04) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
ராணிப்பேட்டை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
ராணிப்பேட்டை நகராட்சி எண்களை தெரிஞ்சிக்கோங்க!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள், தெரு நாய் பிரச்னை குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் நகராட்சி அலுவலகங்களில் வழங்கலாம். மாவட்ட நகராட்சி எண்கள்:
அரக்கோணம்: 04177-236236
ராணிப்பேட்டை: 04172-272502
வாலாஜா: 04172-232207
ஆற்காடு: 04172-235708
மேல்விஷாரம்: 04172-266049
News March 5, 2026
ராணிப்பேட்டையில் தட்டி தூக்கிய அமைச்சர்!

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுராயபுரம் கிராமத்தில் நேற்று(மார்ச் 4) முக்கிய அரசியல் நகர்வு ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர். காந்தி முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


