News March 4, 2026
கடலூர்: தவாகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 10, 2026
கடலூர்: அரசு வேலை… நாளை கடைசி வாய்ப்பு!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு எஸ்பி வேண்டுகோள்

சிதம்பரம் பகுதியில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் மதுபோதையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் சிலர் தவறான வழிகாட்டுதலில், மதுபோதையில் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். எதிர்கால நலன் கருதி இது போன்ற பழக்கத்தில் ஈடுபட வேண்டாம் என எஸ்பி ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 10, 2026
பால் பாக்கெட் மூலம் தேர்தல் விழிப்புணர்வு; ஆட்சியர்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், 2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்த பொதுமக்கள் கூடும் இடங்களில் கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணி, மாரத்தான் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் அச்சடித்து விநியோகிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.


