News March 4, 2026
காங்கேயம் தொகுதியில் இவரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, கார்த்திகேய சிவசேனாதிபதி சென்னை, அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 12, 2026
திருப்பூர் அருகே சோக சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள கண்டியன் கோவில் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் திட்டுப்பாறை என்ற இடத்தில் பி ஏ பி வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் போதே தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து அப்பகுதி மக்கள் அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சுமார் 500 மீட்டர் தொலைவில் அவரை பிணமாக மீட்டனர்.
News March 12, 2026
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழா வரும் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய தேரான அவிநாசி தேர், இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும். இத்திருவிழாவில் திரளான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு தெய்வ தரிசனம் பெற்றுச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News March 12, 2026
திருப்பூரில் தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊடகச் சான்றளிப்பு, பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


