News March 3, 2026
திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். பயணிகளின் உடைமைகள், நடைமேடைகள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.
Similar News
News March 7, 2026
திருச்சி: மின்சாரம் தாக்கி பெண் பலி

திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது வீட்டில் கரூர் மாவட்டம், புத்தூர் நடுப்பட்டியை சேர்ந்த சின்னமணி(50) என்பவர், கட்டிட வேலை செய்துள்ளார். அப்போது மின் ஒயரில் இருந்து மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றதில், பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News March 7, 2026
திருச்சி: பொதுக்கூட்ட பணிகளை ஆய்வு செய்த EX.அமைச்சர்கள்

திருச்சியில் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு பஞ்சப்பூர் அருகே நடைபெற்று வரும் பொதுக்கூட்ட பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News March 7, 2026
திருச்சி: பொதுக்கூட்ட பணிகளை ஆய்வு செய்த EX.அமைச்சர்கள்

திருச்சியில் வரும் 11-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். அதனை முன்னிட்டு பஞ்சப்பூர் அருகே நடைபெற்று வரும் பொதுக்கூட்ட பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


