News March 3, 2026

விழுப்புரத்தில் கார் மோதி பரிதாப பலி!

image

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (73); இவர், நேற்று முன்தினம் பண்ருட்டி-மடப்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற கார், கேசவன் மீது அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கேசவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 10, 2026

JUST IN: விழுப்புரத்தில் இயக்குநரைக் கொன்ற நடிகை!

image

பில்ராம்பட்டு கிராமத்தில் இறந்த நிலையில் குறும்பட இயக்குனர் ஜெயக்குமார் என்பவர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து குறும்பட இயக்குனர் ஜெயக்குமாரை கொலை செய்த துணை நடிகை பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் நேற்று(மார்ச் 9) கைது செய்தனர்.

News March 10, 2026

விழுப்புரம்: IDBI வங்கியில் 1300 காலியிடங்கள்! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 10, 2026

விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய விசிக!

image

விழுப்புரம்: புரட்சி பாரதம் கட்சியிலிருந்து விலகி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் வழக்கறிஞர்கள் நேற்று(மார்ச் 9) இணைந்தனர். இவர்களை, விச்கவின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார், வாழ்த்துகளைக் கூறி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொடர்கள் பலரும் உடன் இருந்தனர்.

error: Content is protected !!