News March 3, 2026

திருவாரூர்: மாமனாரை தாக்கிய மருமகன் கைது

image

நடுவக்களப்பாலை சேர்ந்த அனுப்ரியா. இவரது கணவர் ரமேஷுக்கு குடி பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அனுப்பிரியாவின் தந்தை லட்சுமணன் ஏன் குடித்துவிட்டு சண்டை போடுகிறாய் என ரமேஷை கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரமேஷ் அருகில் கிடந்த கம்பியால் லட்சுமணனை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த புகாரின் பேரில் களப்பால் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

Similar News

News March 7, 2026

திருவாரூர்: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

திருவாரூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 7, 2026

திருவாரூர்: அதிமுக தேர்தல் பணிமனை அமைக்கும் பணி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பந்த கால் முகூர்த்த விழா நேற்று (மார்ச் 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 7, 2026

திருவாரூர்: 412 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, கடத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முழுவர்கும் பறிமுதல் செய்யப்பட்ட 412 கிலோ குட்கா போன்ற போதைப் பொருட்கள், நெய்விளக்கு பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் அடுக்கி வைத்து தீ மூலம் அழிக்கப்பட்டது.

error: Content is protected !!