News March 3, 2026
கடலூர்: தூக்கில் தொங்கிய ஆசிரியர்

திட்டக்குடியை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (35) ஆசிரியர், மனைவி ஸ்வேதாவுடன் காந்தி நகரில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனம் உடைந்த நரசிம்மன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனை சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
கடலூர்: விருப்ப மனு அளித்த அமைச்சர்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒஅலரும் மனு அளித்து வருகின்றனர், அவ்வகையில், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழிலாளர் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வே.கணேசன். சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிட, அறிவாலயத்தில் நேற்று (மார்.5) விருப்பம் மனுவினை அளித்தார். இதில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 6, 2026
தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(52). மூங்கில் படல் செய்யும் கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது ஒரே மகன் சுசீந்திரன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று பொதுத்தேர்வு எழுதினார்.
News March 6, 2026
கடலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

கடலூர், இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி(53). வாகன ஓட்டுனராக உள்ள இவர், கடந்த மார்.3ஆம் தேதி மது வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர், அவரை சரமாரியாக தாக்கி விட்டு பணம், செல்போன், மது பாட்டிலை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி போலீசார் சந்துரு(21), ஜானகிராமன்(24) இருவரை நேற்று கைது செய்து, ஆதித்தின் என்பவரை தேடி வருகின்றனர்.


