News March 2, 2026
தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கில் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வரும் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைதான நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வர உள்ளது.
Similar News
News March 10, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் ➤இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் ➤அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக PAN Card, RC Book, License என டிஜிலாக்கரில் பதிவு செய்த எல்லாவற்றையும் இதன் மூலம் டவுன்லோடு செய்யமுடியும். இந்த முறையில் ஆவணங்களை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம். SHARE.
News March 10, 2026
உரங்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது: FAI

வரவிருக்கும் காரீஃப்(june-nov) சாகுபடி பருவத்திற்கு போதுமான உரம் இருப்பு உள்ளதாக இந்திய உர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மார்ச் 6 நிலவரப்படி 177.31 லட்சம் டன்கள் கையிருப்பு இருப்பதாகவும், இதில் 59.30 லட்சம் டன் யூரியா, 25.13 லட்சம் டன் DAP & 55.87 NPKS லட்சம் டன் ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், எரிவாயு விநியோகம் குறைவது உள்நாட்டு யூரியா உற்பத்தியை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
News March 10, 2026
FLASH: வெள்ளி விலை இன்று ₹10,000 உயர்ந்தது!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்த நிலையில், வெள்ளி விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹10 உயர்ந்து ₹300-க்கும், கிலோ வெள்ளி ₹10,000 உயர்ந்து ₹3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின் வெள்ளி விலை மீண்டும் அதிகரித்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


