News March 2, 2026
FLASH: கோயம்புத்தூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை உப்பிலிபாளையம் மற்றும் சித்ரா பகுதியில் உள்ள பழைய, புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு இன்று மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் (ம) காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
Similar News
News March 11, 2026
கோவை நகர் முழுவதும் போலீஸ் அணிவகுப்பு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று காவல்துறையினர் (ம) அதிவிரைவுப் படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது. பதற்றமான இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு, பொதுமக்களிடையே நம்பிக்கையை விதைப்பதோடு, சமூக விரோத செயல்களை தடுக்கவும் உதவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
News March 11, 2026
மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்ய மத்திய பாதுகாப்புப் படையினரின் (CAPF) கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது. துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் CRPF, RAF உள்ளிட்ட 150 வீரர்கள் 2.7 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


