News March 2, 2026

காஞ்சி: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 11, 2026

காஞ்சிபுரம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

காஞ்சி: தகாத உறவு காதலிக்கு கத்திக் குத்து!

image

உத்திரமேரூர் அருகே ராவத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த லதா (35) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (27) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொண்டு தனியாகச் செல்லுமாறு லதா வலியுறுத்தியதால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வசந்த், தான் வைத்திருந்த கத்தியால் லதாவைக் குத்திவிட்டுத் தப்பியோடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

News March 11, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!