News March 2, 2026
விக்கிரவாண்டியில் துடிதுடித்து பலி!

விக்கிரவாண்டி: மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (49). இவர் நேற்று காலை தனது பைக்கில் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். செஞ்சி அடுத்த பரதன் தாங்கல் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் திடீரென கோவிந்தசாமி பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News March 5, 2026
மேம்பாலம் பணிகளை ஆட்சியர் ஆய்வு!

மரக்காணம் ஒன்றியம் அன்னப்புத்தூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் அன்னப்புத்தூர் – ஓமந்தூர் செல்லும் சாலையில் மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இன்று (மார்ச்.05) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News March 5, 2026
விழுப்புரம் அருகே பெண் தற்கொலை!

அனந்தபுரம் அருகே உள்ள பனமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி ஜெயா(30). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த ஜெயா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஜெயாவின் தந்தை ஏழுமலை அளித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 5, 2026
விழுப்புரம்: சனி பெயர்ச்சி விழா.. சிறப்பு ரயில் இயக்கம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மார்ச் 6, 7 தேதிகளில் விழுப்புரம்-நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 9: 10 மணிக்கு புறப்பட்டு பகல்1:05 மணிக்கு நாகை சென்றடையும். மறு மார்க்கத்தில் பகல் 1:20 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு விழுப்புரம் செல்கின்றது.


