News March 2, 2026
கள்ளக்குறிச்சி: திக்குமுக்காடும் சைபர் க்ரைம் போலீசார்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களை சேர்ந்த கும்பல்கள், புது புது டெக்னிக்கில் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சைபர் க்ரைம் பிரிவில் மொத்தமே 5 காவலர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் சைபர் க்ரைம் பிரிவு திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிநவீன வசதிகளுடன் கூடிய சைபர் பிரிவு தேவை என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News March 5, 2026
ரிஷிவந்தியத்தில் தட்டி தூக்கிய திமுக MLA!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சங்கராபுரம் வடக்கு ஒன்றியம், உலகளப் பாடி ஊராட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள், ரிஷிவந்தியம் சட்டமன்றம் உறுப்பினர் வசந்தம். கார்த்திகேயன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் இருந்தார்.
News March 5, 2026
தியாகதுருகம்: மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அடுத்த குடியநல்லூரில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதில் பணியாற்றி வரும் பாபு என்கிற ஆசிரியர் அப்பள்ளியைச் சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரை மணாலன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், ஆசிரியர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
News March 4, 2026
கள்ளக்குறிச்சி: திருமண தடையா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1800 ஆண்டுகள் பழமையான பரிக்கல் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்தியாவிலேயே இத்தலத்தில் மட்டுமே அனைத்து பிரிவு மக்களாலும் குல தெய்வமாக கொண்டாடப்படுகிறார். மேலும் இந்த கோயில் வந்து தரிசித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் தோஷங்கள் தீரும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


