News March 2, 2026

சங்கராபுரத்தில் அதிரடி கைது!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இளங்கோவன் மனைவி அஞ்சலை என்பவர் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News March 2, 2026

உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விழுப்புரம் சரக டிஐஜி அருள்அரசு, இன்று (மார்ச்.2) காவல் நிலையத்திற்கு உட்பட்ட வருகை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு வந்தார். அப்பொழுது ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அவர்களிடம், குறைகளை கேட்டு அறிந்து,பொதுமக்களுக்கு சிறப்பாக பணி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 2, 2026

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று மார்ச் 2ம் தேதி அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டது.

error: Content is protected !!