News March 1, 2026

கரூர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்!

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம். இந்த தகவலை SHARE செய்யவும்.

Similar News

News March 5, 2026

கரூர்: தட்டித்தூக்கிய செந்தில்பாலாஜி!

image

கரூர் மாநகராட்சி, 40வது வார்டு பகுதி அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் பிரேமலதா, பிரபு மற்றும் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று (மார்ச் 04) முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

News March 5, 2026

அரவக்குறிச்சி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி!

image

அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). இவர் தனது மகள் திவ்யபாரதி (29) உடன் மலைக்கோவிலுார் பாலம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இதே திசையில் நவீன் குமார் (26), என்பவர் வேகமாக ஒட்டி வந்த டூவீலர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் கரூர் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 5, 2026

கரூர்: பெண் விபரீத முடிவு!

image

தோகைமலை அருகே உள்ள கொசூர் ஒட்டப்பட் டியை சேர்ந்த பெத்தாயி (50). கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வந்தநிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் இறந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த பெத்தாயி அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். உறவினர்கள் பெத்தாயியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!