News March 1, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மாசிமக திருவிழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு நாளை (மார்ச் 2) உள்ளூர் விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஓசூர், சூளகிரி, தேன்கனிகோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, மார்ச் 4-ல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
Similar News
News March 11, 2026
TN-ல் பணியாற்றிய காலம் பொற்காலம்: RN ரவி

மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்ட ரவி TN மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 54 மாதங்கள், TN மக்களோடு கலந்து பழகி, அவர்களின் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்ததாக கூறிய அவர், இப்போது TN மக்களை விட்டுப் பிரிகிற சூழல் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், TN-ல் செலவிட்ட இந்த நாள்கள், தன் வாழ்வின் பொற்கால நாள்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
நள்ளிரவில் திடீர் சந்திப்பு.. அரசியலில் பரபரப்பு மாற்றம்!

தமிழக தேர்தல் களத்தில் இன்னும் கூட்டணி அமைக்காத ராமதாஸ், சசிகலா இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், திமுக, அதிமுக இல்லாத விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், தென்மாவட்டங்களில் சசிகலா தரப்பு, வட மாவட்டங்களில் ராமதாஸ் தரப்பு களமிறங்குவது குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
News March 11, 2026
இப்படி விளக்கேற்றுங்கள்.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில், பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டம் அதிகரித்து செல்வம் பெருகும் எனவும் நம்பப்படுகிறது.


