News March 1, 2026
ஈரோடு-கரூர் இடையே ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடு-கரூர் இடையே ரயில்வே பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் மார்ச் 1, 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, திருச்சி-ஈரோடு மற்றும் செங்கோட்டை-ஈரோடு ரயில்கள் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஈரோட்டிற்குப் பதில் கரூரிலிருந்து மதியம் 3:05 மணிக்குத் தொடங்கும். இடையில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் சேவை இருக்காது.
Similar News
News March 2, 2026
கரூர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 2, 2026
கரூரில் கடும் அவதிக்குள்ளாகும் போலீஸ்

கரூரில் கோடை தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தச் சூழலில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளில் வெயிலில் நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்குச் சூரியசக்தி தொப்பிகள் (Solar Caps), இளநீர், நீர்மோர் மற்றும் எலுமிச்சை ஜூஸ் வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் உடல்நலனைக் காக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை!
News March 2, 2026
கரூரில் வசமாக சிக்கிய மூவர்!

குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த்தாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் டவுன், வெங்கமேடு, வெள்ளியணை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த ரவிச்சந்திரன், செந்தில்குமார், வடிவேல் 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


