News March 1, 2026
செங்கை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 4, 2026
செங்கல்பட்டு: செல்வப்பெருந்தகை- முதல்வர் சந்திப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மகள் அக்சயா பிரியா – டாக்டர் ஆர்ஜன் ராயர் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று (மார்ச். 3) இரவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினர். தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
News March 4, 2026
செங்கல்பட்டில் சாகும் வரை சிறை

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிலிப்ராஜ் (30). இவர் சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் மேஸ்திரியிடம் வேலை செய்து கொண்டு அங்கேயே மற்ற தொழி லாளிகளுடன் தங்கி இருந்துள்ளார். 1.1.2011 அன்று சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். இந்த வழக்கில் பிலிப்ராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
News March 4, 2026
செங்கல்பட்டு நகரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு நகரில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக அருகிலுள்ள காவல் அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர உதவி எண்ணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், இன்றைய ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.


