News May 13, 2024

திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி பீகார் வாலிபர் பலி

image

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி பணியாற்றிவந்தவர் பிரஜேஸ் யாதவ் (33). இவரது சொந்த ஊர் பீகார். இந்நிலையில் நேற்றிரவு பிரஜேஸ் யாதவ் மதுபோதையில் கம்பெனியில் உள்ள மின்சார பெட்டியில் கைவைத்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 19, 2025

திருவள்ளூர்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

திருவள்ளூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 19, 2025

திருவள்ளூர்: விமானப் படையில் 340 காலியிடங்கள்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய விமானப் படையில் ‘Flying Branch , Ground Duty’ பிரிவுகளில் உள்ள 340 காலியிடங்களை நிரப்ப தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.14ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே SHARE பண்ணுங்க!

News November 19, 2025

திருவள்ளூர்: தொடர்ந்து இரண்டு கோயில்களில் கொள்ளை

image

திருவள்ளூர்: செஞ்சி பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள முருகன் மட்டும் அம்மன் ஆலயங்களில் பூட்டை உடைத்து நேற்று(நவ.17) இரவு அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து திருட்டுச் சம்பவம் அரங்கேரி உள்ளது இந்த திருட்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!