News March 1, 2026
திருச்சி: திமுகவின் மாநில மாநாடு பணி தீவிரம்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு மார்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News March 5, 2026
திருச்சி: மக்கள் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவி நிரப்பப்படவுள்ளது. தகுதியுடைய நபர்கள் https://tiruchirappalli.dcourts.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் 16 ஆம் தேதிக்குள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
திருச்சி: ஆதார் முகாம் குறித்த அறிவிப்பு

திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர் dotiruchirappalli.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
திருச்சி: விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் ராபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெல், சோளம், எள் பயிருக்கு பிரீமியம் தொகை செலுத்த வரும் 17 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விவசாயிகள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் அருகில் உள்ள பொது சேவை மையங்கள், கூட்டுறவு சங்கங்களில் காப்பீட்டுத் தொகையை செலுத்தி பயனடையுமாறு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


