News March 1, 2026
திருப்பூரில் தவெகவிற்கு பெருகும் ஆதரவு!

திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் பாலமுருகனை நேரில் சந்தித்த பல்சமய நட்புறவு கழகத்தினர், வரும் தேர்தலுக்கான தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். இதற்கான ஆதரவுக் கடிதத்தை மாவட்டத் தலைவர் ஷாஜகான் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாவட்டத் துணைத் தலைவர் நூர் முகமது மற்றும் மாநகர இளைஞரணி பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் பாலமுருகனுக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
Similar News
News March 2, 2026
திருப்பூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
திருப்பூர்: விவசாயிக்கு கத்தி குத்து

நத்தக்காடையூர் அருகே மருதுறை அரண்மனைகாடு பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (48) விவசாயி. இவருக்கும் காளிவலசு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (43) என்பவருக்கும் இடையே, நிலம் பிரச்சினையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பாலமுருகன் ஆத்திரம் அடைந்து, சிவசாமியை கல்லால் தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 2, 2026
திருப்பூரில் இளம்பெண் தற்கொலை

திருப்பூரைச் சேர்ந்த விகாஸ் கண்ணன் மனைவி சோபியா. கடந்த டிச.1-ம் தேதி திருமணமானவர். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முந்தினம் சோபியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே இச்சம்பவம் நடந்ததால், ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


