News May 13, 2024
ஜெயக்குமார் கொல்லப்படுவதற்கு முன் சித்திரவதை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 தினங்கள் கடந்துவிட்டன. போலீஸ் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் வெளியாகின்றன. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் 4 மணி நேரமாவது சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என உடற்கூறு ஆய்வு முடிவுகளின்படி சந்தேகிக்கப்படுகிறது. அவர் உடலில் கடப்பாக்கல் மற்றும் முள் கம்பிகள் வைத்து முழுமையாக கட்டப்பட்டிருந்தது.
Similar News
News March 8, 2026
திருநெல்வேலி: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. 20 – 25 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் <
News March 8, 2026
திருநெல்வேலி கலெக்டர் அதிரடி!

சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 7 பிடிஓ பணியிட மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் சுகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அம்பை பிடிஓ பொன்னுலட்சுமி நெல்லை தெற்கு உதவி இயக்குனர் பி டி ஓவாக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த உலகம்மாள் அம்பைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். வள்ளியூர் பிடிஓ மனோகர் மானூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
News March 8, 2026
திருநெல்வேலி: கார் விபத்தில் திமுக நிர்வாகி பலி

தாழையூத்தை அடுத்த சங்கர் நகர் சாரதாம்பாள் நகரை சேர்ந்த ராஜா மணி. (பேரூா் திமுக அவைத்தலைவர்) நேற்று முந்தினம் இரவு அங்குள்ள நான்கு வழிச்சாலையில் ரயில்வே மேம்பால பகுதியில் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத கார் மோதி படுகாயம் அடைந்தார். பாளை GH-ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராஜாமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.


