News March 1, 2026
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு, ரேஷன் திட்ட பொருட்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் தாயுமானவர் திட்டத்தின் பயனாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் 02.03.2026 மற்றும் 03.03.2026 ஆகிய தேதிகளில் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
பெரம்பலூர்: தெரு நாய் கடித்து மான் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எழுமூர் கிராமப் பகுதிக்குள் பெண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. இந்த மானை அப்பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலை அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து மானை முருக்கன்குடி காப்பு காட்டில் புதைத்தனர்.
News March 1, 2026
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News March 1, 2026
பெரம்பலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


