News March 1, 2026
விழுப்புரம்: கிணற்றில் மிதந்த சடலம்!

மயிலம்:அவனம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (65), நேற்று வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள வயல்வெளிக்கு ஓட்டிச்சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் அவர் சடலமாக மிதந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
விழுப்புரம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
விழுப்புரம்: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய திமுக!

மயிலம் சட்டமன்ற தொகுதி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அதிமுக விளங்கம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் SST. சங்கர் மற்றும் OPS அணியினர் உட்பட 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


